Saturday 19 November 2011

மஹான் பாபாவின் கராமத்துக்கள் பாகம் 8

வாய்வுக்கு வாத்துமுட்டை வைத்தியம்
       மஹான் பாபா அவர்கள் தமது மகனார் முபாரக் ஆலிமுடன் ஹஜ்ஜூக்குச் செல்வதற்காக சென்னை வந்தபோது கிடங்குத்தெரு பள்ளிவாசலில் ஜூபஹூ தொழுகைக்குப் பின்னும் மஃரிப் தொழுகைக்குப் பின்னும் திக்ரு மஜ்லிஸை நடத்துவர் அதில் நானும் கலந்து கொள்வது வழக்கம். ஒருநாள் பாபா அவர்களும் நானும் டாக்ஸியில் போய் கொண்டிருந்தோம். அப்போது பாபா அவர்கள் என்னை நாற்பது நாட்கள் வாத்துமுட்டை சாப்பிடுமாறு கூறினர். அதைக்கேட்ட நான் சிறிது யோசித்தேன். இதையறிந்த பாபா அவர்கள் என்னயோசனை? என்று கேட்க நான் வாத்துமுட்டை வாய்வு ஆயிற்றே என்றேன். உடனே பாபா அவர்கள் உங்கள் உடலிலுள்ள நோய்களனைத்தையும் சொல்லி விடுவேன் நீங்கள் பயந்து விடுவீர்கள். அதனால் சொல்ல மாட்டேனென்று சொன்ன வார்த்தை இன்னும் என்காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்
எனது நண்பரின் கடந்த கால நிகழ்ச்சியை கூறிவியப்பில் ஆழ்த்திய அற்புதம்
       எனது நண்பர் ஒருவரோடு பாபா வலியுல்லாஹ் அவர்களை பார்க்க பனைக்குளத்திற்கு சென்றேன். எனது நண்பர் ஒரு பிரபலமான வியாபாரி அப்போது பாபா அவர்கள் எனது நண்பரை தனியே அழைத்துச்சென்று அவரது கடந்தகால நிகழ்ச்சிகளையெல்லாம் கூறி அவரை வியப்பில் ஆழ்த்தி விட்டனர். இதை எனது நண்பர் என்னிடம் கூறி மிகவும் ஆச்சரியப்பட்டதோடு பாபா அவர்களை புகழவும் செய்தார்
               அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்
நேரில் வந்தால்தான் குணப்படுத்த முடியுமா?
       மஹான் பாபா அவர்கள் எனக்கு பலமுறை வைத்தியம் செய்து எனது நோய்களை குணப்படுத்தியுள்ளனர். சென்னையில் எனக்கு வேண்டியவர்கள் பலருக்கு வைத்திய ஆலோசனைகளை கூறி அவர்களின் நோய்களை குணப்படுத்தியுள்ளனர். ஒருமுறை அவர்கள் அபிராமத்திற்கு வந்திருந்த போது பஸ்ஸூக்கு நேரமாகி விட்டதென்று கூறி எழுந்துவிட அப்போது ஒருவர் வந்து தனது மகளுக்கு சுகக்குறைவாக உள்ளதை கூறினார். தண்ணீர் ஓதித் தருவதாகக் கூறினர். ஆனால் அவர் பாபா அவர்கள் ஒருமுறை வந்து தனது மகளை நேரில் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார் உடனே பாபா அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு நேரில் வந்துதான் பார்க்க வேண்டுமோ? இங்கிரு;தே பார்த்து குணப்படுத்த முடியாதோ? எனக்கூறியது இன்னும் எனது சிந்தையை விட்டு அகலவில்லை
அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்
குளிர் ஜூரத்திற்கு இளநீரைக் கொடுத்து குணப்படுத்திய அற்புதம்
       பாhபவின் மிக நெருக்கமான நேசர் பேயன் ஷரீபுக்கு ஒருநாள் கடுமையான குளிர் ஜூரம் வந்து நடுங்கினார். அப்போது அவர் பாபாவுடைய இல்லத்திற்கு வந்து பாபா அவர்களிடம் தமது குளிர் ஜூரத்திற்கு ஓதிப் பார்க்குமாறு வேண்டினார். அதைக்கேட்ட பாபா அவர்கள் ஒருவரை அழைத்து இளநீரை பறிக்கச்சொல்லி ஒரு கோஸ் கோப்பை நிறைய இளநீரை ஊற்றி அதை ஓதி சாப்பிடுமாறு ஷரீப் அவர்களிடம் கொடுக்க அவரும் அதைவாங்கி மிகவும் சிரமப்பட்டு குடித்தார். அதன்பின் இன்னொரு கோஸ் கோப்பை நிறைய இளநீரை வெட்டி நிரப்பச் சொன்னார்கள்.
       அதைக்கண்ட ஷரீப் அங்குள்ள சிறுவர்களுக்காகத்தான் இளநீரை வெட்டச் சொல்கிறார்களென்று நினைத்தார். அந்த இளநீரையும் பாபா அவர்கள் ஓதி மீண்டும் ஷரீப் அவர்களை நோக்கி இதையும் குடித்து விடுங்களென்று கொடுக்க முன்பு குடித்ததே திணறிக் கொண்டிருக்கும் போது இன்னொரு கோப்பை இளநீரை எப்படிச் சாப்பிடுவது? மேலும் குளிர்ஜூரம் கண்ட நாம் இளநீரை சாப்பிட்டதால் என்னவாகுமோ? என திகைத்துக் கொண்டிருந்தவருக்கு திரும்பவும் இளநீரை கொடுத்து குடிக்கச் சொன்னதும் பயந்தே போய்விட்டார். அதேநேரம் பாபா அவர்களின் Nபுச்சை என்றுமே மறுக்காத அவர் சரி உயிர் Nபுhனாலும் பரவாயில்லை பாபாவின் சொல்லை தட்டக்கூடாதென்று நினைத்தவர் இரண்டாவது கோப்பை இளநீரையும் மிகவும் கஷ்டப்பட்டு குடித்து முடித்தார். அவர் சுயநிலையில் இல்லை அப்போது பாபா அவர்கள் ஷரீபை பார்த்து நீங்கள் உங்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள் அரைமணி நேரம் கழித்து நான் வருகிறேன். நான் வரும்வரை எதுவும் சாப்பிடக் கூடாதென்று சொல்லியனுப்பினர்.
       ஷரீப் அவர்களின் உள்ளத்தில் நாம் வீடுபோய் சேருவதற்குள் நிச்சயம் இறந்து விடுவோமென்று எண்ணி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டை வந்தடைந்ததும் அவருடைய குளிர் ஜூரமெலலாம் பஞ்சாய் பறந்து விட்டது. அடுத்து தாங்க முடியாத பசிவந்து பாபாவின் உத்திரவில்லாமல் சாப்பிடக் கூடாதே என பாபாவுக்காக காத்திருந்தார் அதேநேரம் பசி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தார். அரைமணி நேரத்திற்குப் பிறகு பாபா அவர்கள் வந்து உணவு கொடுதத்னர். இந்நிலையில் அவருக்கிருந்த காய்ச்சல் பாபா அவர்களின் அதிசயமான பக்குவத்தால் பறந்தே போய்விட்டது.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
அம்மை நீஙக முட்டை வைத்தியம்
       நான் ஒருமுறை இராமநாதபுரத்தில் அம்மைநோய் வந்து ஈஸா பள்ளிவாசலிருந்து இரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட வரமுடியாமல் மெதுவாக இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இரயில் ஏறி வலாலந்தரவைக்கு வந்து இறங்கி நடக்க முடியாமல் எப்படியாவது ஊருக்குப் போய் சேர்ந்துவிட வேண்டுமென்று மிகவும் சிரமப்பட்டு பனைக்குளம் கண்மாய் வரை வந்தவன் அதற்குமேல் ஒரு எட்டுக்கூட எடுத்துவைக்க முடியாமல் அங்கிருந்த உடை மரத்தடியில் படுத்து விட்டேன். பிறகு நீண்ட நேரத்திற்குப்பின் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் அதற்குள் எனக்கு மோசமான நிலை ஏற்பட்டு விட்டது. அப்போது வீட்டுக்கு வந்த பாபா அவர்கள் எனது நிலையைப் பார்த்து முக்கால் கோஸ் கோப்பை நிறைய முட்டையை அடித்துத்தந்து முழுவதையும் குடிக்கச் செய்தனர். அதை குடித்து விட்டு படுத்து எழுந்தபோது அம்மை நோய் எங்கே போனதென்றே தெரியவில்லை. புதுத்தெம்போடு பாபா அவர்களின் துஆவால் திகழலானேன்.
அறிவிப்பாளர்: அப்துர்ரஷீத் ஆலிம், பாபாவின் மகனார்.
வெந்நீரின் சிறப்பு
       ஒரு மனிதன் நேமமாக சுடுதண்ணீர் குடித்து வந்தால் அது ஆயிரம் வியாதிக்கு மருந்து.
1.   சுடுதண்ணீர் குடித்து வந்தால் நேரடியாக குடலில் போய் செமிக்க வைத்துவிடும்.
2.   பச்சை தண்ணீரை குடித்தால் உணவை புளிக்க வைத்து அதன்பின் செமிக்கும்.
3.   தண்ணீரை சுட வைப்பதால் அதிலுள்ள கிருமிகளனைத்தும் செத்துப்போய் விடும். அதனால் தொத்து நேய்கள் வராது.
4.   தண்ணீரிலுள்ள களிமண் சத்து, உலோகப் பொருட்கள் அதனால் ஏற்படக்கூடிய வியாதியை நீக்கிவிடும்.
5.   சுடுதண்ணீர் சாப்பிடுவதால் அன்னக்குழாயில் சிக்கியிருக்கும் நெய், கொழுப்புச் சத்து போன்றவைகளை கரைத்து சுத்தப்படுத்தி குடலில் சேர்த்து விடும். பச்சை தண்ணீர் சாப்பிடுவதால் அன்னக்குழாயில் தேங்கியுள்ள நெய், கொழுப்புச் சத்து போன்றவை பாசி பிடித்தது போல் ஆகிவிடும். பல வியாதிகள் வருமென பாபா அவர்கள் கூறினர்.
அறிவிப்பாளர்: யு.மு.மு.அப்துல்ஹக்கீம், பேரையூர்

No comments:

Post a Comment